"பெண்களின் கைப் பையில் என்ன இருக்கும்" என்று யாரிடமாவது நீங்கள் கேட்டுப் பாருங்கள். உடனே பதில் வரும் இப்படி: பௌடர், கண்ணாடி, சீப்பு, பொட்டு, லிப்ஸ்டிக் இத்யாதி இத்தாதி...... ஆனால் என் கைப் பையில் எப்போதும் இருப்பது இரு நூல்கள். அப்படி, நான் எப்போதும் என் கைப்பையில் வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்று அன்பு நூல், மற்றொரு அறிவு நூல். அதாவது, திருவாசகம் அன்பு நூல், திருக்குறள் அறிவு நூல். இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு மிகமிக அவசியம். இந்த இரு நூல்களை ஆழ்ந்து கற்று உள்வாங்கிக் கொண்டாலே போதுமானது. அவ்வாறு உள்வாங்கிக் கொண்டவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். உலகில் தனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் அதை இறைவன் செயல் அதுவும் சிவனின் செயல் என்று மௌனமாக ஏற்றுக்கொள்வார்கள். இதைத்தான் சைவ சித்தாந்தமும் போதிக்கிறது. எது நடந்தாலும் அது சிவன் செயல் என்று இரு. அவன் உடனாய் இருந்து எல்லாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். நாம் வெறும் கருவிதான் . இதுதான் சைவசிந்தாந்த உண்மை. எத்தகைய குழப்பத்தில் இருந்தாலும் இந்த இரு நூல்களில் ஏதாவது ஒன்றை எடுத்துப் புரட்டி, கண்ணில் பட்டதை வ...
நேர்காணலுக்கான சுட்டி இணைப்பில்... http://tamilonline.com/thendral/article.aspx?aid=15285 ஒலி வடிவம் : http://www.tamilonline.com/thendral/playaudio.aspx?aid=15285 தென்றல் இதழின் பி.டி.எஃப் வடிவம் : http://tamilonline.com/thendral/pdfdownload.aspx தென்றல் இதழின் ஈ பப் ஆக வாசிக்க : http://tamilonline.com/thendral/filedownload.aspx?id=3223 தென்றல் இதழின் கிண்டில் வடிவம் : http://tamilonline.com/thendral/filedownload.aspx?id=3224 தென்றலுக்காக நேரம் ஒதுக்கி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அன்புடன் அரவிந்த் http://tamilonline.com/thendral/
தினமணி சிறுவர் மணியில் வெளியான "செல்லாக்காசு" என்ற சிறுகதையை சாகித்ய அகாதெமியினர் தேர்வு செய்து "சிறுவர் கதைக் களஞ்சியம்" என்னும் நூலில் இணைத்திருக்கிறார்கள். அந்தக் கதையை என்னை எழுதத் தூண்டியது என் தாய் - தந்தை என்னிடம் கொடுத்த அன்றைய காசுகள்தான். படத்தைப் பாருங்கள் புரியும். மேலும் அந்நூல் குறித்த ஆய்வுரையும் வழங்க என்னைப் பணித்திருக்கிறார்கள் சாகித்ய அகாதெமியினர். அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்.... மகாகவி பாரதியார் , மறைமலையடிகள், பாரதிதாசன், பெரிசாமித்தூரன், கி.வா.ஜ., அழ.வள்ளிப்பா, தமிழ்ஒளி, வானதி திருநாவுக்கரசு, வாண்டுமாமா முதலிய எழுத்து ஜாம்பவான்களின் கதைகளுடன் என் கதையும் உள்ளது நெஞ்சை நெகிழச் செய்கிறது. (தாய்-தந்தை என்னிடம் தந்துவிட்டுச் சென்ற விலைமதிக்க முடியாத சொத்து இவை. 1975களில் இந்தக் காசுகளை வைத்துப் பொருள்களை வாங்கிய அந்த அனுபவம், நினைவு நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்கிறது.
Comments
Post a Comment