"பெண்களின் கைப் பையில் என்ன இருக்கும்" என்று யாரிடமாவது நீங்கள் கேட்டுப் பாருங்கள். உடனே பதில் வரும் இப்படி: பௌடர், கண்ணாடி, சீப்பு, பொட்டு, லிப்ஸ்டிக் இத்யாதி இத்தாதி...... ஆனால் என் கைப் பையில் எப்போதும் இருப்பது இரு நூல்கள். அப்படி, நான் எப்போதும் என் கைப்பையில் வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்று அன்பு நூல், மற்றொரு அறிவு நூல். அதாவது, திருவாசகம் அன்பு நூல், திருக்குறள் அறிவு நூல். இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு மிகமிக அவசியம். இந்த இரு நூல்களை ஆழ்ந்து கற்று உள்வாங்கிக் கொண்டாலே போதுமானது. அவ்வாறு உள்வாங்கிக் கொண்டவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். உலகில் தனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் அதை இறைவன் செயல் அதுவும் சிவனின் செயல் என்று மௌனமாக ஏற்றுக்கொள்வார்கள். இதைத்தான் சைவ சித்தாந்தமும் போதிக்கிறது. எது நடந்தாலும் அது சிவன் செயல் என்று இரு. அவன் உடனாய் இருந்து எல்லாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். நாம் வெறும் கருவிதான் . இதுதான் சைவசிந்தாந்த உண்மை. எத்தகைய குழப்பத்தில் இருந்தாலும் இந்த இரு நூல்களில் ஏதாவது ஒன்றை எடுத்துப் புரட்டி, கண்ணில் பட்டதை வ...
அனந்தபாரதியின் நொண்டி நாடகம்! தினமணி - தமிழ்மணி (20.3.16) by - இடைமருதூர் கி.மஞ்சுளா சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 என்பதை அறிவோம். ஆனால், பிற்காலத்தில் "சிந்து' என்ற ஒருவகை இசைப்பாட்டுத் தோன்றியுள்ளது. பள்ளு, நாடகம், குறவஞ்சி முதலிய பல நூல்கள் அவ்வகையில் தோன்றியவை. மாணிக்கவாசகர், தாயுமானவர், வள்ளலார் முதலியோர் ஞான நூல்களிலுள்ள ஆனந்தக் களிப்பும், இச்சிந்து என்னும் இசை நூல் வகையைச் சார்ந்ததே. நொண்டிச் சிந்து என்ற ஒரு சிந்தும் வழக்கிலிருந்து, பின் அது வழக்கொழிந்திருக்கிறது. சிந்து வகையைச் சார்ந்த இசை நூல்கள் பல 18-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இவை பற்றிய விளக்கங்கள் பழைய செய்யுள் இலக்கணமாகிய யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களில் காணப்படவில்லை. இசையோடு பாடும் வகையில் கவிஞர்களது கற்பனையில் தோன்றிய புதிய வகைச் சிந்துப் பாடல்கள் நாடகத் துறையைச் சேர்ந்தவை. அக்காலத்து மக்களால் அது போற்றப்பட்டு வந்துள்ளது என அறியமுடிகிறது. நொண்டிச்சிந்து வகையைச் சார்ந்ததே "திரு விடைமருதூர் நொண்டி நாடகம்' (இவ்வாறுதா...
வணக்கம் தமிழறிஞர்களே அன்பு நண்பர்களே... இன்று அக்.12 இன்று நம் தாய்மொழியான தமிழ், செம்மொழி தகுதி பெற்றத் திருநாள். இதை நாம் உலகமெங்கும் கொண்டாடி மகிழ வேண்டாமா..... தமிழ்மொழி பேசும் (பிறமொழிக் கலப்பில்லாமல்) ஒவ்வொரு தமிழ் இல்லங்களிலும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா.... ஏதாவது ஒரு மாற்றம் நிகழ வேண்டுமானால் அம்மாற்றம் முதலில் உன்னிடமிருந்தே தொடங்க வேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் கூறிய அருள் வாக்கிற்கிணங்க... இன்று... இந்த ஆண்டு தமிழ்ச் செம்மொழி நாளை நாற்பதுக்கும் மேற்பட்ட என் இனிய தமிறிஞர்கள், தோழர் - தோழியருக்குத் தமிழ்ச் செம்மொழி நாள் வாழ்த்து (குறுஞ்செய்தி மூலம்) தெரிவித்து, என்னிடமிருந்தே இதைத் தொடங்கி வைத்தேன். பலரும் இதற்கு மறுமொழி கொடுத்து நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்கள். அவர்களுள் புலவர் பதுமனார், திரு ராஜ்கண்ணன்,, கணையாழி ஓவியர் திரு சீனிவாசன்,, திரு.தெ.ஞானசுந்தரம், செம்மூதாய் சு.சதாசிவம், பேராசிரியர் ரமேஷே், திருமதி தாயம்மாள் அறவாணன், திரு.முத்துக்குமார சுவாமி, தோழி மகேஸ்வரி, திராணி உ.மணி போன்ற...
Comments
Post a Comment