அனந்தபாரதியின் நொண்டி நாடகம்! தினமணி - தமிழ்மணி (20.3.16) by - இடைமருதூர் கி.மஞ்சுளா சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 என்பதை அறிவோம். ஆனால், பிற்காலத்தில் "சிந்து' என்ற ஒருவகை இசைப்பாட்டுத் தோன்றியுள்ளது. பள்ளு, நாடகம், குறவஞ்சி முதலிய பல நூல்கள் அவ்வகையில் தோன்றியவை. மாணிக்கவாசகர், தாயுமானவர், வள்ளலார் முதலியோர் ஞான நூல்களிலுள்ள ஆனந்தக் களிப்பும், இச்சிந்து என்னும் இசை நூல் வகையைச் சார்ந்ததே. நொண்டிச் சிந்து என்ற ஒரு சிந்தும் வழக்கிலிருந்து, பின் அது வழக்கொழிந்திருக்கிறது. சிந்து வகையைச் சார்ந்த இசை நூல்கள் பல 18-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இவை பற்றிய விளக்கங்கள் பழைய செய்யுள் இலக்கணமாகிய யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களில் காணப்படவில்லை. இசையோடு பாடும் வகையில் கவிஞர்களது கற்பனையில் தோன்றிய புதிய வகைச் சிந்துப் பாடல்கள் நாடகத் துறையைச் சேர்ந்தவை. அக்காலத்து மக்களால் அது போற்றப்பட்டு வந்துள்ளது என அறியமுடிகிறது. நொண்டிச்சிந்து வகையைச் சார்ந்ததே "திரு விடைமருதூர் நொண்டி நாடகம்' (இவ்வாறுதா...
மலேசியாவில் 25- 29 பிப்ரவரி 2016இல் நடைபெற்ற கோலாலம்பூர் - சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்குச் சென்று வந்த அனுபவத்தைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பு.... அந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுபது எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியிடப்பட்டு கௌரவிக்கப்பட்டன. அந்தகைய படைப்புகளுள் எனது நிம்மதி சிறுகதைத் தொகுதியும் ஒன்று. இச் சிறுகதைத் தொகுதிக்கு என் முதல் வாசகியான என் தாய்தான் அணிந்துரை வழங்கியிருக்கிறார். ஆனால், அந்த நூலைக் கண்குளிரக் காண அவர் இவ்வுலகில் இல்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறைவன் திருவடியை அடைந்துவிட்டார். அதனால், நிம்மதி என்ற சிறுகதைத் தொகுதி எழுதிய எனக்கு நிம்மதி கிடைத்ததா என்றால்........ மௌனமே பதில். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு டத்தோ எம். சரவணன் (துணையமைச்சர், இளைஞர், விளையாட்டுத் துறை) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 27.2.16 அன்று மலேசியாவில் வெளியாகும் தமிழ் நேசன் பத்திரிகையில் இந்தச் செய்தி வெளியாகி இருக்கிறது. (பக்.7) சென்னை கலைஞன் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்....
வணக்கம் தமிழறிஞர்களே அன்பு நண்பர்களே... இன்று அக்.12 இன்று நம் தாய்மொழியான தமிழ், செம்மொழி தகுதி பெற்றத் திருநாள். இதை நாம் உலகமெங்கும் கொண்டாடி மகிழ வேண்டாமா..... தமிழ்மொழி பேசும் (பிறமொழிக் கலப்பில்லாமல்) ஒவ்வொரு தமிழ் இல்லங்களிலும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா.... ஏதாவது ஒரு மாற்றம் நிகழ வேண்டுமானால் அம்மாற்றம் முதலில் உன்னிடமிருந்தே தொடங்க வேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் கூறிய அருள் வாக்கிற்கிணங்க... இன்று... இந்த ஆண்டு தமிழ்ச் செம்மொழி நாளை நாற்பதுக்கும் மேற்பட்ட என் இனிய தமிறிஞர்கள், தோழர் - தோழியருக்குத் தமிழ்ச் செம்மொழி நாள் வாழ்த்து (குறுஞ்செய்தி மூலம்) தெரிவித்து, என்னிடமிருந்தே இதைத் தொடங்கி வைத்தேன். பலரும் இதற்கு மறுமொழி கொடுத்து நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்கள். அவர்களுள் புலவர் பதுமனார், திரு ராஜ்கண்ணன்,, கணையாழி ஓவியர் திரு சீனிவாசன்,, திரு.தெ.ஞானசுந்தரம், செம்மூதாய் சு.சதாசிவம், பேராசிரியர் ரமேஷே், திருமதி தாயம்மாள் அறவாணன், திரு.முத்துக்குமார சுவாமி, தோழி மகேஸ்வரி, திராணி உ.மணி போன்ற...
Comments
Post a Comment