Posts

சனி தோஷம் நீங்க அஷ்டமியில் பைரவர் வழிபாடு

Image
சனி தோஷம் நீங்க அஷ்டமியில் பைரவர் வழிபாடு By   இடைமருதூர் கி.மஞ்சுளா (தினமணி - வெள்ளிமணி) First Published :   21 August 2014 05:36 PM IST புகைப்படங்கள் பஞ்ச (சிவ) மூர்த்திகளுள் ஒருவர் பைரவர். இவரை வைரவர் என்றும் கூறுவர். சிவனின் அம்சமாகத் தோன்றியவர். பைரவர் என்ற சொல்லுக்குக் காவலர் என்று பொருள். இவர் மஹா பைரவர், உக்கிர பைரவர், கால பைரவர், வடுகநாதன், சட்டைநாதர், அஷ்ட பைரவர்கள், யோக பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் முதலிய பல பெயர்களில் அருள் பாலிக்கிறார். நாயைத் தன் வாகனமாகக் கொண்டவர். காரணம், இரவில் நடக்கும் பலவற்றை அறியும் திறன் நாய்க்கு உண்டு. மேலும், காலத்தை அறிந்து சொல்லும் (உணர்த்தும்) சூட்சும புத்தி கொண்டது நாய். குறிப்பாக, காலன் வருவது, கண்ணுக்குத் தெரியாத பல தீய சக்திகள் அலைவது போன்றவற்றைக் கண்டு அவற்றைத் தெரிவிக்கும் ஆற்றலும் நாய்க்கு உண்டு. அதனால் காவல் தெய்வமான பைரவருக்கு நாய் வாகனமாக அமைந்தது. அசுரர்களை அழிக்க துர்க்கை புறப்பட்டபோது, துர்கைக்குப் படைத்தலைவனாக, அவளுக்கு உதவும் பொருட்டு சிவபெருமானால் (தம் அம்சமாக) அனுப்பப்பட்டவர்தான...

ஒன்பதை வெட்டினால் ஒன்றையாவது நடு

Image
ஒன்பதை வெட்டினால் ஒன்றையாவது நடு! By   இடைமருதூர் கி.மஞ்சுளா First Published :   09 April 2015 01:43 AM IST நம் முன்னோர் மொழிந்த "ஒன்றைப் பிடுங்கினால் ஒன்பதை நடு' என்கிற வாசகத்தை நாமெல்லாம் மறந்துவிட்ட காரணத்தால்தான் உலகம் இன்றைக்கு வெப்ப மிகுதியால் தாக்கப்பட்டு, ஆண்டுக்கு ஆண்டு கூடுதல் வெப்பத்தால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம். காரணம், ஒன்பதைப் பிடுங்கினோம்; அதற்கு மேலும் பிடுங்கிக் கொண்டே இருக்கிறோம்; ஆனால், ஒன்றைக்கூட நம்மால் நட முடியவில்லை. அதை நடுவதற்கு இன்றைக்கு நமக்கு இடமுமில்லை; எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகிக் கொண்டிருப்பதனால்... உலகம் வெப்பமயமாக மாறிக் கொண்டிருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்களை மட்டும் குறிப்பிடலாம். முதல் காரணம், காடுகளில் உள்ள மரங்களை அழித்து, மழை பொழிய விடாமல் தடுப்பது; இரண்டாவது, சாலை, தொழிற்சாலை, கட்டடங்கள் போன்றவற்றைப் புதிது புதிதாக அமைக்கிறோம், குடியிருப்புகளை உருவாக்குகிறோம் என்கிற பெயரில் நாட்டில் உள்ள மரங்களையும் வயல்களையும் அழித்து வருவது. சங்க காலம் தொட்டு இன்றுவரை மரங்களை தெய்வமாக வழிபடும் மரபு தமிழர...

உரிமைப் போர் இதழாளர்கள்

Image
உரிமைப் போர் இதழாளர்கள் By   இடைமருதூர் கி.மஞ்சுளா First Published :   02 May 2015 02:30 AM IST இதழியல் துறை' என்பது கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தனித் துறையாகவே இயங்கி வருகிறது. பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளங்கலை தமிழ் இலக்கியம் (பி.லிட்.) படிக்கும் மாணவர்களுக்கு "இதழியல்' தனிப் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது. "டையர்னல்' என்ற லத்தீன் சொல்லில் இருந்து தோன்றிய "ஜர்னலிசம்' என்கிற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமே "இதழியல்' எனும் சொல். தமிழ் இதழ்களின் வளர்ச்சிக்கு மூன்று போர்கள் (இந்தியாவின் சுதந்திரப் போர், இரு உலகப் போர்கள்) முக்கியக் காரணமாக அமைந்தன. சுதேசமித்திரன், இந்தியா, தமிழ்நாடு, தினமணி, தினசரி, பாரததேவி, நவஇந்தியா, தேசபக்தன், நவசக்தி, திராவிடன், சண்டமாருதம் ஆகிய நாளிதழ்கள் சுதந்திரப் போருக்குக் குரல் கொடுத்தவைகளுள் முதன்மையானவை. விடுதலை இயக்கத்துக்கும், பத்திரிகைகளுக்கும் இடையே இருந்த உறவை, "இந்தியாவில் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை முதலில் அதிகரிக்கச் செய்தது சென்ற மகா யுத்தமாகும். யுத்தச் செய்திகளை ஜனங்கள் பட...

படித்தவர்களால் வந்த பிழை!

Image
படித்தவர்களால் வந்த பிழை! By   இடைமருதூர் கி.மஞ்சுளா First Published :   21 June 2015 12:38 AM IST புகைப்படங்கள் அன்பு நூலான திருவாசகத்துக்குப் பொருள் கூறக்கூடாது என்ற ஒரு மரபு தமிழ் நாட்டில் பன்னெடுங்காலமாக வழங்கி வருகிறது. ஆனால், அந்த மரபையும் மீறி பலர் உரை எழுதியுள்ளனர். தற்போது எண்ணற்ற உரைப் பதிப்புகள் வெளிவந்துள்ளன - வந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால், இப்போது வெளிவரும் உரைப் பதிவுகள் பலவும் மூல ஏட்டை அடியொற்றி பதிப்பிக்கப்படுகின்றவா என்பதுதான் சந்தேகம். காரணம், அவற்றில் மலிந்து காணப்படும் சொற்பிழை, பொருட்பிழை, வாக்கியப் பிழை, சந்திப் பிரிப்புப் பிழை போன்றவைகளே! தமிழறிஞர் மு.அருணாசலம் எழுதிய "திருவாசகம் சில ஆராய்ச்சிக் குறிப்புகள்' என்ற நூல் சைவ சித்தாந்த மகா சமாஜ அறுபதாண்டு நிறைவு மலராக 1965-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அதில் மு.அருணாசலம் குறிப்பிடும் தகவல்களிலிருந்து மூல நூலைப் படிக்காமல் படியெடுத்ததைக் கொண்டு மீண்டும் மீண்டும் படியெடுக்கும்போது ஏற்படும் அவலத்தைத் "திருத்தமான பாடம்' என்ற தலைப்பில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: ...

தேவதைகளை இழந்த வீடுகள்!

Image
தேவதைகளை இழந்த வீடுகள் ! Author: இடைமருதூர் கி . மஞ்சுளா First Published: Sep 12, 2015 1:35 AM Last Updated: Sep 12, 2015 1:35 AM இந்த உலகுக்கு வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை ; போகும்போதும் எதையும் கொண்டு செல்லப் போவதுமில்லை . இந்த உலகுக்கு வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை ; போகும்போதும் எதையும் கொண்டு செல்லப் போவதுமில்லை . ஆனால் , இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் உறவுகளின் அன்பு , பாசங்களிலிருந்து நம்மால் விடுபட முடியவில்லை , பாசத்தில் வழுக்கி விழாமல் இருக்க முடியவில்லை .  ÷ முன்பு , வானொலியில் " காணாமல் போனவர்கள் ' பற்றிய அறிவிப்பு செய்வார்கள் . அதில் ஓரிருவர்தான் குறிப்பிடப்படுவர் , அதிலும் குறிப்பாக , மனநிலை சரியில்லாதவர் , வயதானவர் , திருவிழாவில் தொலைந்து போனவர்கள் இப்படியாகத்தான் இருப்பர் . ஆனால் , தற்போது காணாமல் போனவர்கள் பட்டியலில் குழந்தைகள் , சிறுவர் - சிறுமியர்தான் அதிகம் உள்ளனர் .  ÷ நாம் அன்றாடம் புழங்கும் சிற்சில பொருள்கள் தொலைந்து விட்டாலே உள்ளம் வெதும்புகிற...