Posts

பரிமேலழகர்' உரைக்குத் தெளிபொருள் விளக்கம்!

Image
பரிமேலழகர்' உரைக்குத் தெளிபொருள் விளக்கம்! 25.9.2016 - தினமணி தமிழ்மணி -மணிவாசகப்பிரியா என்கிற (இடைமருதூர் கி.மஞ்சுளா) திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள் காலந்தோறும் தோன்றினாலும், பரிமேலழகர் உரையே அவ்வுரை நூல்களுக்கு வழிகாட்டியது எனலாம். ஆனால், பரிமேலழகரின் உரைத்திறன் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதன்று. அத்தகைய உரைத்திறனிலும் ஆழங்காற்பட்டவர் கோ. வடிவேல் செட்டியார். இவர்  திருக்குறளுக்கு வழங்கியுள்ள தெளிபொருள் விளக்கம், கருத் துரை, குறிப்புரை ஆகியவை தமிழறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டிருக்கிறது - பின்பற்றப்பட்டிருக்கிறது. இவரது தெளிபொருள் விளக்க நூலைத் தேடி எடுத்து, "சிவாலயம்' ஜெ.மோகன் என்பவர் பதிப்பித்து, தமிழ்கூறு நல்லுலகத்திற்கு வழங்கியிருக்கிறார். ÷1904-இல் இரண்டு பாகங்களைக் கொண்டு முதல் பதிப்பும் (ரூ.6), அதையடுத்து 1919-இல் ஆங்கில மொழிபெயர்ப்புடன் திருத்தமான இரண்டாவது பதிப்பும்(ரூ.8) வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு(2015) ஜெ.மோகனால் பதிப்பிக்கப்பட்ட நூல், வடிவேல் செட்டியாரின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பாராட்டியோரின் பாராட்டுரைகள், வடிவேல் செட்டியார் க...

எட்டும் இரண்டும்

Image
 எட்டும் இரண்டும் by -இடைமருதூர் கி.மஞ்சுளா   (7.8.2016 - தினமணி- தமிழ்மணி) ÷மணிவாசகரின் ஒவ்வொரு சொல்லும், சொற்றொடரும் பல மெய்யியல் கருத்துகளை மிக நுட்பமாக (சூட்சுமமாக) விளக்குபவை. அத்தகைய சொற்றொடர்களுள் ஒன்றுதான் "எட்டும் இரண்டும்'! அதற்கான விளக்கத்தைக் காண்போம். ÷"எட்டும் இரண்டும் அறியாதவனாக இருந்த என்னை ஆன்றோர் ஆய்வு செய்யும் சயமவாத சபையில் - பட்டிமண்டபத்தில் ஏற்றினை ஏற்றினை என இறைவனின் திருவருளை மணிவாசகப் பெருமான் இரண்டு முறை வியந்துகூறி, தன்னால் அவனுக்குக் கைம்மாறு செய்யமுடியாததற்காக வருந்துகிறார். ""எட்டும் இரண்டும் அறியாதவன்' என்ற பழமொழி, மணிவாசகரின் சொற்றொடரைக் கொண்டே எழுந்ததாகும். அப்பாடல் வருமாறு:   ""கட்ட றுத்தெனை ஆண்டு கண்ணார நீறு இட்ட அன்பரொடு யாவரும் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டினோடு இரண்டும் அறியேனையே'' (திரு.திருச்சதகம்-5; கைம்மாறு கொடுத்தல், பா.49) ÷இப்பாடலில் அவர் குறிப்பிடும் அந்த எட்டும் இரண்டும் எவை என்பதற்கான சுவாமி சித்பவானந்தர் தரும் விளக்கம் வருமாறு: ""அஷ்டமூர்த்தி தத்துவத்தையும் அ...

பிரபஞ்சப்போர்

Image
 பிரபஞ்சப்போர் - தினமணி - வெள்ளிமணி (08.7.2016) கட்டுரையாளர்: இடைமருதூர் கி.மஞ்சுளா இறைவனை முதன் முதலாகக் கண்ணால் கண்டு களித்து மகிழ்ந்தவர். மணிவாசகர் தேவார மூவர்க்கும் முன்னவர் என்பதற்காக சான்றுகள் அனைத்தும் உறுதியாக உள்ளதால், இவரே இறைவனை முதன் முதலில் கண்ணால் கண்டவர் என்பது உண்மை.  மாணிக்கவாசக சுவாமிகள்தான். இறைவனை அம்மையப்பனாக, உமையொருபாகனாக அவர் கண்ட காட்சியைத் திருவாசகத்தில் பல இடங்களில் அகச்சான்றாகவே பதிவு செய்துள்ளார். அந்த அம்மையப்பரைக் காணவும், அவ்விறைவனின் திருவடியை அடைந்து, மீண்டும் பிறவா வரம்பெற்று, பேரின்பப் பெருநிலை பெறுவதற்கும் ஒரேவழி அன்புவழி(நெறி) ஒன்றுதான் என்பதை அறிவுறுத்தியவர் அவர். மணிவாசகர் கூற, இறையவனால் எழுதப்பட்ட முதன்மை நூலும் முதல் நூலுமாகும் திருவாசகம். இச்சிறப்பு வேறு எந்த பக்தி இலக்கியத்திற்கும் கிடையாது.   அன்புநெறியில் அமைந்த அன்பு நூலான திருவாசகத்தின் 46ஆவது பதிகமான திருப்படையெழுச்சியில் உள்ள இரு பாடல்கள் மூலம் அவர், பக்தர்களையும், சித்தர்களையும், தொண்டர்களையும், யோகிகளையும் ஒரு போருக்குப் புறப்படச் சொல்கிறார். அது என...

பிரபந்த தீபிகையில் பதினெண்கீழ்க்கணக்கு - தமிழ்மணி

Image
பிரபந்த தீபிகையில் பதினெண்கீழ்க்கணக்கு By - இடைமருதூர் கி . மஞ்சுளா சங்கத் தொகை நூல்களுள் பதினெண்கீழ்க்கணக்கும் ஒன்று . பதினெட்டு நூல்களின் தொகுப்பு . கீழ்க்கணக்கு நூலின் இலக்கணம் பற்றி பன்னிருபாட்டியல் இரு (346, 348) நூற்பாக்களில் குறிப்பிடுகிறது . நாம் செய்யும் வினைகளை எப்படி எப்படிச் செய்து வருகிறோம் என்பதற்கு இறைவன் முறையான கணக்கு ( பட்டோலை ) எழுதிக்கொண்டு இருக்கிறான் என்பதை , "" தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று அழுது , காமுற்று , அரற்று கின்றாரையும் , பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே '' என்று கூறும் அப்பரடிகள் , " கீழ்க்கணக்கு ' என்ற சொல்லை தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார் . அப்பரடிகளின் பாடல் சிவபெருமான் பட்டோலை தீட்டுகிறான் என்பதையும் , உயிர்கள் அனைத்தின் கணக்கையும் எழுதிக்கொண்டு இருக்கிறான் என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது . " பட்டோலை ' என்பது பொதுவாக அரசர் விடும் திருமுகத்தையே குறிக்கும் . ஆனால் ,...

தன்னம்பிக்கையே முதலீடு...வெற்றியே இலக்கு - நேர்காணல்- இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
தன்னம்பிக்கையே முதலீடு ... வெற்றியே இலக்கு ! சொல்கிறார் : எஸ் . ஜெயலட்சுமி  ' அபாகஸ் ' கணக்குப் பயிற்சியைக் கற்றுத்தரும் கல்வி நிறுவனங்களுள் ஒன்றுதான் " ஹர்ஷா அகாடமி '. சென்னை கொரட்டூரில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ் . ஜெயலட்சுமி , கல்லூரியில் படிக்கும்போதே மாநில அளவில் விருது பெற்றவர் . தற்போது , இந்நிறுவனத்தை நன்முறையில் நடத்தி வருவதற்காகவும் , நல்ல பயிற்சியாளராக இருப்பதற்காகவும் IQMA INSTITUTE, இவருக்கு 2015 இல் விருதையும் பொற்காசையும் வழங்கியுள்ளது . அவரிடம் பேசியபோது :   இந்நிறுவனம் தொடங்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது ?  ÷ நான் பி . காம் ( அக்கவுண்ட்ஸ் , காமர்ஸ் ) படித்துவிட்டு , கல்லூரி காம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டு டி . சி . எஸ் நிறுவனத்தில் சீனியர் பிராசஸ் அசோசியேட்டாகப் பணிபுரிந்து வந்தேன் . எனக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தபிறகு , என் மகளைப் பார்த்துக்கொள்ள முடியாததால் என் வேலையை விடும் சூழ்நிலை ஏற்பட்டது . அச்சமயம் , என் கணவ...