Posts

சிறுவர் கதைக் களஞ்சியம் -செல்லாக் காசு -

Image
தினமணி சிறுவர் மணியில் வெளியான "செல்லாக்காசு" என்ற  சிறுகதையை சாகித்ய அகாதெமியினர் தேர்வு  செய்து "சிறுவர் கதைக் களஞ்சியம்" என்னும்  நூலில் இணைத்திருக்கிறார்கள்.  அந்தக் கதையை என்னை எழுதத் தூண்டியது என் தாய் - தந்தை என்னிடம் கொடுத்த அன்றைய  காசுகள்தான். படத்தைப் பாருங்கள் புரியும்.  மேலும் அந்நூல் குறித்த ஆய்வுரையும் வழங்க என்னைப் பணித்திருக்கிறார்கள் சாகித்ய அகாதெமியினர். அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்.... மகாகவி  பாரதியார் , மறைமலையடிகள், பாரதிதாசன், பெரிசாமித்தூரன், கி.வா.ஜ.,  அழ.வள்ளிப்பா, தமிழ்ஒளி, வானதி திருநாவுக்கரசு,  வாண்டுமாமா  முதலிய எழுத்து ஜாம்பவான்களின் கதைகளுடன் என் கதையும் உள்ளது நெஞ்சை நெகிழச் செய்கிறது. (தாய்-தந்தை என்னிடம் தந்துவிட்டுச் சென்ற விலைமதிக்க முடியாத சொத்து இவை. 1975களில் இந்தக் காசுகளை வைத்துப் பொருள்களை வாங்கிய அந்த அனுபவம்,  நினைவு நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்கிறது.

2ஆவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

Image
ஜூன் 9, 10, 11 மூன்று நாள்கள் முதல் நாள் சொல்லரங்கம் "ஒரு சொல் கேளீர்" தலைமை: பேராசிரியர் இராசகோபாலன், எஸ்.ஆர்.எஸ். பங்கேற்பு:  ஒரு சொல் முனைவர் யாழ் சு.சந்திரா (புலம்) முனைவர் க.பலராமன் (செல்வம்- திருக்குறளில்) இடைமருதூர் கி.மஞ்சுளா (நாய்- (திருவாசகத்தில்) தோழர் கன்னிக்கோயில் இராஜா,  தோழிகள் சக்தி ஜோதி , லலிதா மதியுடன் அடியேன். திருமதி வாசுகி கண்ணப்பன், மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் மெய்யப்பன் அவர்களின் சகோதரி (பெயர் நினைவில்லை), இடைமருதூர் கி.மஞ்சுளா, செந்தாமரைக் கொடி(கவிஞர்)

சிறுவர் கதைக் களஞ்சியம்

Image

பட்டாம்பூச்சி சொன்ன பாடம்

Image

“சொல்லிக் கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு…”

Image
காலம் அறிந்து கூவியுள்ள சேவல் கவிஞர் மயிலாடுதுறை இளைபாரதியின் ஓர் அற்புதமான நூல், “சொல்லிக் கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு…”  கன்னிக்கோயில் இராஜா அவர்கள் என்னைக் கை காட்ட, உடனே அவர் எனக்கு இந்நூலை அன்பளிப்பாக அனுப்பி ஒருமாதம் ஆகிறது. உடனே படித்து, பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடிட்டு வைத்துக் கொண்டேன். என்றாலும், உடனே அவர் நூலுக்கு மதிப்புரை தரமுடியவில்லை. இந்நூலை ஒவ்வொரு பெற்றோரும் முதலில் படிக்க வேண்டும். அடிக் கோடிட்டதில் சில துளிகள்….உங்கள் பார்வைக்கு… 1.    நேரத்தின் அருமையை எடுத்துச் சொல்லி குழந்தைகளை உணரச் செய்ய வேண்டும். காலத்தின் அருமையை எவரொருவர் தன் இளமைக் காலத்திலேயே தெரிந்து கொள்கிறார்களோ, அவர்கள்தான் வாழ்க்கையில் எதை, எப்போது செய்ய வேண்டும் என்கின்ற உணர்வினைப் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களால்தான் சாதனை வாழ்க்கையை வாழ்ந்துகாட்ட முடியும். “போகும் காலம் திரும்ப வராது” என்று அவர்களுக்கு உணர்த்துவது நம் கடமையல்லவா…? 2.    படிப்புக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதில்லை. நிறைய படித்தவர்கள் கூட நல்ல பழக்...

தினமணி சிறுவர் மணி... மதி இழந்த மந்தி!

Image
தினமணி சிறுவர் மணி...13.5.2017 மதி இழந்த மந்தி! -இடைமருதூர் கி.மஞ்சுளா ÷அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. "கதைத் தாத்தா வந்தாச்சுடா....' என்ற குரல் கேட்டதும், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் அனைவரும் "திடுபுடு திடுபுடு' என்று ஒலி எழுப்பியபடி மாடிப் படிகளிலிருந்து இறங்கி, குடியிருப்பின் கீழே ஆஜராகி விடுவார்கள். ""ஒரு ஊர்ல ஒரு....'' என்று அந்தத் தாத்தா ஆரம்பித்ததும் சிறுவர்கள் அனைவரும் "வாவ்வ்வ்வ்'' என்று உற்சாகக் குரல் கொடுப்பார்கள். ÷ அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் வசிக்கும் மீனாவின் தாத்தா கிராமத்திலிருந்து சென்னை வந்து இரண்டு வாரங்களாகின்றன. மீனாவின் பாட்டி இறந்தபிறகு, தாத்தாவை கவனித்துக் கொள்ள யாருமில்லை என்பதால் மீனாவின் அம்மா, அவரைச் சென்னைக்கே அழைத்து வந்து தங்களோடு தங்க வைத்துவிட்டார். தாத்தா ஓய்வு பெற்ற ஒரு தமிழாசிரியர். ÷ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில் அந்தக் குடியிருப்பின் அருகே இருக்கும் சிறு சிமெண்ட் பெஞ்சுகளில் அங்கு வசிக்கும் சிறுவர்கள் அனைவரையும் அமரவைத்து விடுவார். கர்ண பரம்பரைக்...

கலித்தொகையில் கற்புநெறி!

Image
கலித்தொகையில் கற்புநெறி! -மணிவாசகப்பிரியா By- இடைமருதூர் கி.மஞ்சுளா  (தினமணி - தமிழ்மணி 14.5.2017) ÷"கற்பு' என்பதற்கு அகராதியில் கல்வி, அறிவு, முல்லைக்கொடி, கதி, மகளிர் கற்பு, ஆணை, தியானம் எனப் பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இங்கு மகளிர் கற்பு குறித்து காண்போம். "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்' (6-4) என்று வியந்து போற்றினார் வள்ளுவப் பெருந்தகை. "பெண்ணின் பெருமை' பேசியவர் திரு.வி.க. "புதுமைப் பெண்'களைப் படைத்துக் காட்டியவர் மகாகவி பாரதியார். பெண் குழந்தைகள் பற்றி சிறப்பாகப் பாடிவைத்தவர் பாரதிதாசன். மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதன்முதலில் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர். இப்படி எத்தனையோ அறிஞர்களும் கவிஞர்கள் பெண் பிறவியைப் பெரும் பிறவியாகப் போற்றியுள்ளனர். ÷ஔவையார், காரைக்கால் அம்மையார், சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் எனப் பலரும் தம்முடைய பாடல்களில் ஒழுக்கம், கற்பு நெறி போன்றவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எழுதியதன் காரணம், "கற்பு ஒன்றுதான் பெண்ணுக்கு அணிகலன்' என்பதால்தான். அதை இருவருக்கும் (ஆண...