Posts

சென்னைப் பல்கலைக்கழகம் - உ.வே.சா. நூலக பவள விழா

Image
சென்னைப் பல்கலைக்கழகம், உ.வே. சா. நூலகம் (பவள விழா) இணைந்து   நடத்திய   பத்துப்பாட்டு நூல் வெளியீடு 23.8.2017) மற்றும் பத்துப்பாட்டு குறித்த கருத்தரங்கில் (மதுரைக் காஞ்சியைப் பற்றி) பேசியது.

நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்

Image
நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் - தொடர்பாக, தினமணி சார்பில் சற்குரு அவர்களை  நேர்க்காணல் செய்தபோது... இது ஓர்  அற்புத அனுபவம். இந்த நிகழ்ச்சியில் சத்குரு  அவர்களின் நயன தீட்சை கிடைக்கப் பெற்று, வாழ்வில் பெரும் பேறு பெற்றேன்.

நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்

Image
நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் கோவை , ஈஷா அறக்கட்டளையின்   நிறுவனரான சற்குரு , மக்களுக்கு   யோகப் பயிற்றி , ஆன்மிகம் என்பதையும் கடந்து ,   ஒரு சமூகச் சிந்தனையோடு ,   அக்கறையோடு   " நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் ' என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார் .   நம் நதிகளும் ஆறுகளும்   வற்றிக்கொண்டே வருகின்றன . இதற்கான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை . முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சற்குருவின் அவர்களின் இந்தத் திட்டத்தின் நோக்கம் .   நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தினமணி சார்பாக சற்குரு அவர்களை நேர்காணல் செய்யும் மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது நான் கேட்ட நான்கு ஐந்து கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள், விளக்கங்கள் மிக நீண்டவை. இக் கூடிய விரைவில் இந்த வலைப்பூவில் படிக்கலாம். இந்தப் பேட்டியின் சுருக்கம் இன்று தினமணியில் (பக்.12) வெளியாகியிருக்கிறது. அதில், “நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்” என்ற தலைப்புக்குப் பதிலாக...