Posts

Showing posts from September 25, 2016

பரிமேலழகர்' உரைக்குத் தெளிபொருள் விளக்கம்!

Image
பரிமேலழகர்' உரைக்குத் தெளிபொருள் விளக்கம்! 25.9.2016 - தினமணி தமிழ்மணி -மணிவாசகப்பிரியா என்கிற (இடைமருதூர் கி.மஞ்சுளா) திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள் காலந்தோறும் தோன்றினாலும், பரிமேலழகர் உரையே அவ்வுரை நூல்களுக்கு வழிகாட்டியது எனலாம். ஆனால், பரிமேலழகரின் உரைத்திறன் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதன்று. அத்தகைய உரைத்திறனிலும் ஆழங்காற்பட்டவர் கோ. வடிவேல் செட்டியார். இவர்  திருக்குறளுக்கு வழங்கியுள்ள தெளிபொருள் விளக்கம், கருத் துரை, குறிப்புரை ஆகியவை தமிழறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டிருக்கிறது - பின்பற்றப்பட்டிருக்கிறது. இவரது தெளிபொருள் விளக்க நூலைத் தேடி எடுத்து, "சிவாலயம்' ஜெ.மோகன் என்பவர் பதிப்பித்து, தமிழ்கூறு நல்லுலகத்திற்கு வழங்கியிருக்கிறார். ÷1904-இல் இரண்டு பாகங்களைக் கொண்டு முதல் பதிப்பும் (ரூ.6), அதையடுத்து 1919-இல் ஆங்கில மொழிபெயர்ப்புடன் திருத்தமான இரண்டாவது பதிப்பும்(ரூ.8) வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு(2015) ஜெ.மோகனால் பதிப்பிக்கப்பட்ட நூல், வடிவேல் செட்டியாரின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பாராட்டியோரின் பாராட்டுரைகள், வடிவேல் செட்டியார் க