Posts

Showing posts from April 22, 2018

நாடோடிக் கதைகள்-2

Image
பிகார் மாநில நாடோடிக் கதை தமிழில் : இடைமருதூர் கி . மஞ்சுளா ( தினமணி – கொண்டாட்டம் 22.4.18) போதை அழிவின் ஆணிவேர்                 தேவதூதன் ஒருவன் விமானம் ஒன்றில் அமர்ந்து வான்வெளியில் சென்று கொண்டிருந்தான் . திடீரென்று அவன் மயக்கமுற்றதால் ,   தடுமாறிப்போன அவன் ,   விமானத்தோடு பூமியில் வந்து விழுந்துவிட்டான் .                 அந்த விமானம் ஒரு பிச்சைக்காரன் வீட்டின் முன்பு விழுந்தது . அதைக் கண்ட பிச்சைக்காரன் , " என்னைப் போல இவனும் அதிர்ஷ்டம் இல்லாதவன் போல தோன்றுகிறதே ...' என்று நினைத்தான் .                 குடிசையின் முன்பு வந்து விழுந்து கிடந்த அந்தத் தேவதூடன் முகத்தில்   தண்ணீர்   தெளித்து ,   மயக்கத்தில் இருந்த அவனை விழிக்கச் செய்தான் பிச்சைக்காரன் .                 கண் விழித்துப் பார்த்த தேவதூதன் , தன்னைக் காப்பாற்றிய அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்து , " என்னைக் காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி . நான் உனக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன் '' என்று கூறி , தன் விமானத்தில்   இருந