Posts

Showing posts from February 19, 2017

வைகையில் இன்னுமொரு முறை வெள்ளம் வருமா?

Image
பாண்டி நன்நாடான மதுரையில், நேற்று (19.2.2017)   தினமணி சார்பில் நடந்த (இலக்கிய முன்னோடிகள் வரிசையில்…) கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் “வள்ளுவர் முதற்றே அறிவு” (கட்டுரை வாசிக்கும்) நிகழ்ச்சியில், முதன்முதலில் அலுவலக நண்பர்கள் சிலருடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மதுரை அரசாளும் அன்னை ஸ்ரீமீனாட்சி தரிசனத்துடன் மகன் சுப்பிரமணியனையும் (திருப்பரங்குன்றம்) தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.   (தினமணியும், மதுரை தமிழ் இசைச் சங்கமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சி -  வள்ளுவர் முதற்றே அறிவு - கவிப்பேரரசு வைரமுத்துவின் எழுச்சி உரை) கவிப்பேரரசு அவர்கள் ஆற்றிய எழுச்சி உரை சுவாமி விவேகானந்தரின் எழுச்சி உரையையே எனக்கு நினைவுகூர வைத்தது. அவரது வித்தகத் தமிழுக்கு தலை வணங்குகிறேன். மகாகவி பாரதியார் ஆசிரியராக இருந்த சேதுபதி பள்ளி மட்டுமல்ல, எங்கள் ஆசிரியரும் படித்த பள்ளி அது. அங்கு எங்களை அழைத்துச் சென்றார். 51 என்ற எண்ணுள்ள அறைதான் பாரதியார் பாடம் நடத்திய அறை என்றவுடன், அங்கு ஓடிச் சென்று ஒரு மாணவியாய் சிலமணித் துளிகள் அமர்ந்து அகமகிழ்ந்தேன். (மதுரை அரசாளும் மீனாட்சி திரு