Posts

Showing posts from March 20, 2022

உலக மகளிர் தின விழா - விருதுகள் (23.3.2022)

Image
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் இந்துஸ்தான் சேம்பரில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி... இடைமருதூர் கி.மஞ்சுளாவின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி அவருக்கு வழங்கப்பட்ட "சக்திச் சுடர்" விருது.. வழங்கப்பட்டது..

சந்திப்பு - விஜயா பதிப்பகம்- திரு வேலாயுதம் அண்ணாச்சி அவர்களுடன்....

Image
20.3.22 தினமணி தமிழ்மணியில் கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி அவர்களின் முத்து விழா நிகழ்ச்சி பற்றி கலாரசிகன் அவர்கள் சிலாகித்து எழுதியதைப் படித்தபோது, அவரை ஒரு முறையாவது சந்தித்து அவரிடம் ஆசி பெற வேண்டும் என்று தோன்றியது. அதற்கான வாய்ப்பு உடனே அமைந்ததுதான் பெரும் வியப்பு. இன்று (21.3.2022) என் தோழி மகேஸ்வரி சற்குரு அவர்களுடன் அண்ணாச்சி அவர்கள் வீட்டுக்குச் சென்று.... சந்தித்து ஆசி பெற்றது மிகுந்த மனநிறைவைத் தந்தது. அன்பு, எளிமை, கருணை, கள்ளம் கபடம் இல்லாத தன்மை.... அனைத்துக்கும் சொந்தக்காரர் வேலாயுதம் அண்ணாச்சி அவர்கள்... என்பதை நொடிப் பொழுதில் தெரிந்து கொண்டேன். அண்ணாச்சி அவர்கள் தனது முத்து விழாவை அன்போடு தர... அதை நான் பெற்றுக்கொண்டு, எனது உண்மை தந்த பரிசு என்ற (சிறுவர் கதைகள்) நூல் அவரிடம் கொடுத்து அகமகிழ்ந்தேன். - இ.கி.ம. (21.3.22)