Posts

Showing posts from November 2, 2014

புலவர் பதுமனாரின்

பெருமதிப்பிற்குரிய, பேரன்பிற்குரிய புலவர் பதுமானார் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் (இன்று-7.11.2014) வந்திருந்தது. அவர் கையால் நன்றி மாலைகளைச் சூட்டிக்கொண்டதில் பெருமகிழ்ச்சியில் திளைக்கிறேன். இப்படிப்பட்ட பெரியோரின் ஆசிர்வாதங்கள்தான் என்னையும் என் எழுத்துத் திறமையையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை நான் உணர்கிறேன். இது என் தமிழன்னைக்கும் நான் கற்ற சமயக் கல்விக்கும் கிடைத்த பரிசு. அதற்கு வழி அமைத்துக் கொடுத்த தினமணிக்கு என் பணிவான வணக்கங்கள் பல. புலவர் பதுமனார் அவர்கள் எழுதிய கடிதத்தைப் படியுங்கள். எழுத்துக்களால் செதுக்கிச் செதுக்கி படிப்பவரை உருக வைத்துள்ளார். அவருக்கு என் பணிவான வணக்கங்கள் - நன்றிகள். புலவர் பதுமனாரின் கடிதத்தில் உள்ள முத்துக்கள் இவை பெறுநர்: இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள் பேரன்புடையீர்… வணக்கம். “அபாயம் வராமல் இருக்க உபாயம்” என்னும் கட்டுரையை 31.10.2014 அன்று வெளியான வெள்ளிமணியில் கண்டேன். உவகை கொண்டேன். கட்டுரையைக் கவினுற வழங்கிய கலைபயில் செல்வமாகிய தாங்கள் (இடைமருதூர் கி.மஞ்சுளா) தினமணிக்கு வாய்த்த திருமாமணியென்றே போற்றி மகிழ்கிறேன். “சொல்லின் என்ன இர

வாரியாரின் வாரிசாம்....

தினமணி வாசகரும் என் நட்பிற்கு உரியவருமான பெரியவர் கவிஞர் அ.வெ. முல்லை நிலவழகன் அவர்கள். இவர் வானளாவிய தமிழ்ப் பேரவை என்ற ஓர் அமைப்பின் நிறுவனர். தினமணியில் என்னுடைய படைப்புகளைப் படித்துவிட்டு மிகவும் வியந்து போவார். காரணம், உங்களுடைய மொழி நடை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, ஆன்மிகக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, சிறுவர் இலக்கியம், நேர்காணல், ஆராய்ச்சி இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் எல்லாவற்றிலும் உங்களால் எப்படி இப்படி ஆழங்கால்பட்டு எழுதமுடிகிறது என்பதுதான் அவருடைய முதல் கேள்வியாக இருக்கும். என் படைப்புகளைப் பத்திரிகையில் பார்த்த அன்றே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பல தமிழறிஞர்களுள் முல்லை நிலவழகன் குறிப்பிடத்தக்கவர். அந்த வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தினமணி வெள்ளிமணியில் வெளியான அபாயம் வராமல் இருக்க உபாயம் என்ற கட்டுரையைப் படித்துவிட்டு வியந்து வியந்து போய் தொலைபேசியில் பேசித் தீர்த்தவர். உடனே ஒரு கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ளவற்றை அப்படியே படியுங்கள் வணக்கம். நாத்திகம் கொடிகட்டிப் பறந்த காலத்தில், நாத்திகத் தலைவர்களின் பேச்சுக்கு எவரும் ஈடுகொடுக்க ம