Posts

Showing posts from August 18, 2013

புதைபொருளாகும் பொருளாதாரம்

இடைமருதூர் கி.மஞ்சுளா உள்ளதைச் சொல்கிறேன்....நல்லதைச் சொல்கிறேன்... பொருளாதாரம் என்பது பொருளைச் சார்ந்ததா அல்லது மக்களைச் சார்ந்ததா அல்லது சமுதாயத்தைச் சார்ந்ததா...படித்தவர்களுக்கு மட்டுமா அல்லது பாமர்ர்களுக்குமா.... பொருலாதாரம் என்பது வெற்றுப் பேச்சா அல்லு வாழ்க்கை நடைமுறைக்கு சாத்தியமா... இத்தகைய கேள்விகள் பாமரர்கள்கூட இன்றைய நாள்களில் கேட்டகத் தொடங்கிவிட்டார்கள். பொருளாதாரம் எந்ற சொல்லின் மூலம், கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதன் பொருள் வீட்டின் நிர்வாகம். உள்ளதைக் கொண்டு தேவைகளை முடியும் மட்டும் நிறைவுசெய்து கொள்வது. பொருளாதாரம் சமூகவியலைச் சார்ந்தது. அது பொருள், சேவையின் உற்பத்தி, பங்கீடு, நுகர்வுகளைப் பற்றிய கல்வி. இக்கல்வியைப் பற்றிப் படித்தால் மட்டும் போதுமா... வாழ்க்கைக்குப் பயன்படவேண்டாமா... அதுதானே கல்வியின் பயன்! ஆடம்ஸ்மித் என்பவர், பொருளாதாரம் என்பது மனித வாழ்வையும் அவர் பொருள் தேவைகளையும் பற்றி அறிவது என்கிறார். இதில் ஒரு பகுதி பொருலாதார வளம் என்றால், மற்ற முக்கியமான பகுதி மனித வளம் என்கிறார் ஆல்பிரட் மார்ஷல். பொருளாதாரம் மக்களைச் சார்ந்தது. அவர்களின் தேவைகளைப் பூர

மூன்றாவது...தாருங்கள்

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர், நாவண்மை உடையவர், அருங்குணம் கொண்டவர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். ஒரு முறை நண்பர் ஆறுமுகம் என்பவர் தம்முடைய குடும்பத் தொடர்பாகக் கும்பகோணத்தில் ஒருவருக்கு பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தார். அதில் சாட்சி கையெழுத்திட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரத் தெரு என்பது. அதை நூற்றுக்காரத் தெரு என்றும் அழைப்பர். இந்த இண்டில் எதைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மகாவித்துவான், இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு என்று போட்டுவிடும் என்று கூறினார். அவர் கூறியதில் உள்ள நகைச்சுவை உணர்வை அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல். (வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு) இரவில் சுண்ணாம்பை அவசியம் ஏற்பட்டாலொழிய இரவல் வாங்கக்கூடாது என்று கூறுவது முன்னோர் வாக்கு. அவ்வாறு வாங்கினால் மூன்றாவது தாருங்கள் என்று கூற வேண்டும் என்பார்கள். இது இன்றைக்கும் வழக்கில் உள்ளது. அதைத்தான் மகாவித்துவான் நகைச்சுவை உணர்வுடன் கூறியிருக்கிறார்.

தியாகமே துறவின் அஸ்திவாரம்

சுவாமி விவேகானந்தர் துறவு பூணக் காரணமாக இருந்த அவர் அன்னை மிகப்பெரிய ஞான அறிவுப் பேரொளி. புலிக்குப் பிறந்தது பின் எப்படி இருக்கும்.... சுவாமி விவேகானந்தர் நரேந்திரனாக இருந்தபோது துறவறம் மேற்கொள்ள விரும்பினார். ஆனால், தமது தாயாரின் அனுமதி வேண்டும் என்று காத்திருந்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தாயாரிடம் தமது துறவு விருப்பத்தைத் தெரிவிப்பார். ஒருமுறை அவ்வாறு துறவுக்கு அனுமதி கேட்டபோது, சமையலறைக்குப் போய் அங்கிருந்து கத்தியை எடுத்து வா என்றார் அன்னை. விவேகானந்தர் கத்தியைக் கொண்டு வந்து கொடுத்ததும், கொஞ்சநாள் போகட்டும், பிறகு நீ சன்னியாசி ஆகலாம் என்று கூறிவிட்டார். ஒருமுறை கத்தியைக் கொண்டு வந்து விவேகானந்தர் கொடுத்ததும், இனி துறவுக்குப் போகலாம் தடையில்லை என்றார். துறவுக்கு அனுமதி கோரும் பொழுதெல்லாம் கத்தியைக் கொண்டுவரச் சொன்ன காரணம் என்ன என்று அன்னையைக் கேட்டார் விவேகானந்தர். அன்னை சிரித்துக்கொண்டே, முன்பு ஒவ்வொரு முறை நான் கத்தியைக் கொண்டுவரச் சொன்ன போதும், பாதுகாப்பான கைப்படியை நீ வைத்துக்கொண்டு ஆபத்தான கூர்மைப் பகுதியை என் பக்கம் நீட்டுவாய். ஆபத்து பிறருக்கு, பாதுகாப்பு உன

வார்த்தை இன்றிப் போகும்போது....

Image
சிவாய நம திருச்சிற்றம்பலம் சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய்மைவைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே...                                                                                                                                                                                                          -சைவ எல்லப்ப நாவலர் என் அன்பான நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், வாசகர்களுக்கும்... மற்றும்...என்னுடைய படைப்புகளோடு சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் கொண்டு   அதைப்பற்றி (திட்டிப்)  பதிவு  செய்ய இருக்கும் பண்பாளர்களுக்கும் அடியேனின் அன்பான பணிவான வணக்கம்.  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை அறிந்தே என் பணியைத் தொடங்குகிறேன். நல்ல செய்திகளை நான்கு பேர் அறிய வேண்டும் என்பார்கள். அதன்படி, இன்றைய தொழில்நுட்பத்தின் (பிரமிக்க வைக்கிறது)  மூலம் நல்ல செய்திகளை (மட்டுமே)ப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.  இந்த பிளாகை உருவாக்கியதற்குப் பல காரணங்கள் சொ

புத்தரின் தியானம் என்னும் மந்திரம்

Image
இன்று ஆகஸ்டு 17. என் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஆம், தியானம் என்றால் என்ன என்பதை மிகவும் எளிமையாகப் பிரிய வைத்த அந்த நூலுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். ஒரு காட்டு வழியே பயணித்த முனிவர் நீண்ட பயணத்தாலும் பசியாலும் களைப்படைந்தார். உண்பதற்கு காய்கறிகள் கிடைக்குமா என சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு, மந்தையை கவனித்துக் கொண்டிருந்த ஒரு மாடு மேய்ப்பவரன் கண்ணில் பட்டான். அவனை அணுகி, உண்பதற்கு ஏதாவது கிடைக்குமா எனக் கேட்டார். உடனே முனிவருக்காக பால் சகறந்து அருந்தக் கொடுத்தான் மாடு மேய்ப்பவன். பசி தீர்ந்த அவர், தாம் ஒரு வல்லமை பெற்ற முனிவர் என்பதையும், இறைவனியமிருந்து அவனுக்காக எதையும் பெற்றுத்தர முடியும் என்பதையும் சொன்னார். ஆனால், அவனோ ஓர் அலட்சிய சிரிப்புடன் எனக்குத் தேவையான எல்லாம் இந்த மாடுகள் மூலம் கிடைக்கின்றன. வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது. தேவை என்று எதுவும் இல்லை என்றான். ஏதோ ஒருவிதத்தில் பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என யோசித்த முனிவர், சரி.... உனக்கு உலகிலேயே பிடித்தது எது என்றார். அப்போதும் மந்தையில் இருந்த ஒரு மாட்டை சுட்டிக் காட்டினான். உடனே முனிவர், உன்னிடம் ம