Posts

Showing posts from August 18, 2019

நூல் வெளியீடு - திருவாசகம், சிறுவர் கதைகள்

https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/19/book-release-function-in-chennai-3216951.html

திருவாசகம் (சமய இலக்கியம்), தாத்தா சொன்ன கதைகள் (சிறுவர் இலக்கியம்) இரு நூல்கள் வெளியீடு.

Image
திருவாசகம் (சமய இலக்கியம்), தாத்தா சொன்ன கதைகள்  (சிறுவர் இலக்கியம்) இரு நூல்கள் வெளியீடு. நூல் வெளியீடு இடம்- கன்னிமாரா நூலகர் வாசகர் வட்டம் 18.8.2019, மாலை 4 மணி. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில்.... பேராசிரியர் இராம.குருநாதன் வரவேற்புரை வழங்கியதுடன் காதல் செய்து உய்மின் நூல் குறித்து அற்புதமான பல பதிவுகளை முன்வைத்தார். “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்” என்று மாணிக்கவாசகர் ஏன் கூறியிருக்கிறார் என்பதையும், அறிவு வேறு, உணர்வு வேறு என்பதை முன்னுரையில் விளக்கமாகத் தந்திருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.  அடுத்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள் காதல் செய்து உய்மின் நூலை வெளியிட, செல்வி பானுமதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.  சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள் நூலின் அறிமுக உரை குறித்துப் பேசியபோது,, “2006-ஆம் ஆண்டு முதன்முறையாக சகோதரி மஞ்சுளாவின் திருவாசகத்தில் புராணக் கதைகள் நூலை - திருவான்மியூர் கோயிலில் வெளியிட்டது முதலே சகோதரி மஞ்சுளாவைத் தெரியும். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குமேல் இப்போது இப்படியொரு வாய்ப்பு மீண்டும் எனக்குத் தந்திருக்கிறார