Posts

Showing posts from June 29, 2014

மணிக்கவாசகப் பெருமான் குருபூஜை

Image
வணக்கம் அன்பர்களே, வாசகப் பெருமக்களே.... மீண்டும் ஒரு குருபூஜை செய்தியோடு உங்களைச் சந்திக்கிறேன். நேற்று (2.7.2014) காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றத்தில் ஆனி மக நன்னாளான மணிவாசகர் குருபூஜையை முன்னிட்டு திருவாசகம், திருப்பாண்டிப்பதிகம் பதிகம் நூல் வெளியிடப்பட்டது. இதில் அம்மன்றத்தின் அமைப்புச் செயலாளரான திரு. இரா சச்சிதானந்தம் அவர்கள் (90 தள்ளாத வயதிலும் மாணிக்கவாசகருக்காக அயராத அன்போடு உழைக்கிறார்), திருப்பாண்டிப்பதிகம், மலரை வெளியிட்டு வாழ்த்தி. மூலபண்டாரம் என்ற தலைப்பில் உரையாற்றியவர், திருவாசகச் செம்மணி திரு. எ.வேலாயுதனார் அவர்கள், முதல் படியைப் பெற்று இன்ப வெள்ளம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியவர் இடைமருதூர் க.மஞ்சுளா அவர்கள். இந்நிகழ்ச்சிக்கு தலைமேற்று, ஒருவன் என்னும் ஒருவன் என்ற தலைப்பில் தலைமையுரை ஆற்றியவர் திருமுறைச் செம்மணி திரு. ஆ. அருளரசு அவர்கள். காலையில் திருவாசகம் முற்றோதலும், மாலையில், ஓதுவார்களின் திருமுறை விண்ணப்பம் மற்றும் சிந்தைக்கினிய திருவாசகச் சொற்பொழிவுகளும் இனிதே நடைபெற்றன. அடியேன் இந்த குருபூஜையில் கலந்துகொண்டு திருப்ப