Posts

Showing posts from June 17, 2018

பாட்டி சொன்ன பாப்பா கதைகள் நூல் வெளியீடு

Image
திரு வசீகரன் அவர்கள் எழுதிய "பாட்டி சொன்ன பாப்பா கதைகள்" நூல் வெளியீடு குறித்த செய்திகள் மின்னல் தமிழ்ப்பணியில் வெளிவந்திருக்கிறது.  

திருவாசகம்- திருக்கோவையார் - கலாரசிகன் (இந்தவாரம்) பதிவு

Image
தினமணி - தமிழ்மணி  கலாரசிகன் பாராட்டு..... (17.6.2018) ஒரு மகிழ்ச்சியான செய்தி  "தமிழ்மணி' பகுதியை வெளிக்கொணர அதைத் தொடங்கியது முதல் கடந்த பத்தாண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருக்கும் "தினமணி' நாளிதழின் முதன்மை உதவி ஆசிரியர் இடைமருதூர் கி.மஞ்சுளா முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.      தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், "மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் மரபுகள்' என்கிற தலைப்பில் திருவாசகம் -திருக்கோவையார் குறித்த அவரது ஆய்வுக்கு "முனைவர்' பட்டம் வழங்கி சிறப்பித்திருக்கிறது. முனைவர் பட்ட ஆய்வுக்குப் பலரும் ஏதாவது சுமாரான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, தனக்குப் பிடித்தமான - தன் மானசீக குருநாதரான மாணிக்கவாசகரின் திருவாசகம் -  திருக்கோவையாரைத்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தவர் அவர். கடந்த ஏழு ஆண்டுகளாக அதற்காக இரவும் பகலும் பல தரவுகளையும் தேடிப் பிடித்து, திருவாசகம் -  திருக்கோவையாரில் மூழ்கித் திளைத்து அவர் மேற்கொண்ட சிரமங்கள் ஏராளம்.     சங்க இலக்கியம், சமய இலக்கியம்,  சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம்,