Posts

Showing posts from November 3, 2019

பகைவனுக்கு(ம்) அருள்வாய் நன்னெஞ்சே....

Image
  பகைவனுக்கு ( ம் ) அருள்வாய் நன்னெஞ்சே .... இடைமருதூர் கி . மஞ்சுளா                " ஆன்மிக லட்சியத்தைப் புறக்கணித்துவிட்டு , மேலைநாட்டு நாகரிகத்தின் பின்னால் செல்வாயானால் , முன்றே தலைமுறைகளில் உனது இனம் அழிந்து போய்விடும் ' என்று சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது நமக்கு எச்சரிக்கையோ ? சாபமோ ? ஆனால் , அது இப்போது பயன்தர  -  பலிக்கத் தொடங்கிவிட்டது . " வலிமைமிக்க , சுறுசுறுப்பான , சிரத்தை பொருந்திய இளைஞர்களே தேவை . அத்தகைய நூறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமான மாறுதலைப் பெற்றுவிடும் . எனக்கு நூறுகூட வேண்டாம் ; பத்து இளைஞர்களைத் தாருங்கள் நான் இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் ' என்று வீரமுழக்கமிட்ட சுவாமி விவேகானந்தர் இளைஞர்களையே மலை என நம்பினார் . கண்காணிக்கவும் , காப்பாற்றவும் யாருமின்றி காட்டு விலங்குகளில் ஒவ்வோர் இனமாக அழிந்து வருவதைப் போல , மனித நேயமில்லாமல் மனித இனம் விரைவில் அழிந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் ,   அண்மைக் காலமாக அரங்கேறிவரும் கொலை , கொள்