Posts

Showing posts from June 5, 2022

இடைமருதூர் கி.மஞ்சுளாவின் முனைவர் பட்ட ஆய்வு -"மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்" நூல் வெளியீடு- எழுத்துச் சிற்பி - விருது

Image
முனைவர் பட்ட நூல் வெளியீடு, அறிமுக உரை. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு வட்டார நூலகம், ஆழ்வார்பேட்டை வாசகர் வட்டம் மற்றும் மணிவாசகர் பதிப்பகம் இணைந்து நடத்திய இடைமருதூர் கி.மஞ்சுளாவின் முனைவர் பட்ட ஆய்வான “மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்” என்கிற நூல் வெளியீடும், அப்பா ஓர் அவதாரம் எனும் நூல் அறிமுக விழாவும் (5.6.2022) பலருடைய ஆசிரிவாதத்தோடு இனிதே நடைபெற்றது. அழைப்பிதழில் உள்ளபடி இல்லாமல் சில மாற்றங்களோடு இந்நூல் வெளியீடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. மணிவாசகர் பதிப்பகம் பதிப்பித்த இடைமருதூர் கி.மஞ்சுளாவின் டாக்டர் பட்ட ஆய்வு “மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்” என்ற நூல் அறிஞர்கள் பலர் முன்னிலையில் எதிர்பார்த்ததைவிட அற்புதமான - நெகிழ்ச்சியான நிகழ்ச்சியாக அமைந்தது இறைவனின் திருவருள்தான். பேராசிரியர் திரு.இராம. குருநாதன் அவர்கள் தலைமையிலும், புதுகை தருமராசன், மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் திரு மீனாட்சிசுந்தரம் அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், குழந்தைக் கவிஞர் திரு அழவள்ளியப்பா அவர்களின் திருமகள