Posts

Showing posts from November 20, 2016

ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே...

Image
ஆவதும் பெண்ணாலே ... அழிவதும் பெண்ணாலே ... - இடைமருதூர் கி . மஞ்சுளா ÷ இந்த பூமியை புண்ணிய பூமி என்று நம் முன்னோர்கள் போற்றிப் புகழ்ந்து சொல்லி வைத்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை . நம் பாரத தேவியைப் பெண்ணாக உருவகப்படுத்தியுள்ளோம் . மண்ணைத் தாய்மண் என்றனர் . நதிகளையும் ஆறுகளையும் பெண்ணாக்கிப் பெருமைப்படுத்தினர் . நம் தாய்மொழியான தமிழைத்   தமிழ்த் தாயாக்கிப் பார்த்தனர் . இராமன் புகழ்பெற்றதும் , அல்லலுற்றதும் பெண்ணால்தான் ; இராவணன் அழிந்ததும் பெண்ணால்தான் ; வாலி மாண்டதும் பெண்ணால்தான் ; மதுரை எரிந்ததும் பெண்ணால்தான் . மகாபாரதம் தோன்றியதும் பெண்ணால்தான் . ஆதிசங்கரர் , ராமகிருஷ்ணர் , சுவாமி விவேகானந்தர் , பகவான் ஸ்ரீரமணர் , ராமானுஜர் - இப்படிப் பல " ஆண் ' ஞானிகளைப் பெற்றெடுத்து இப்பூவுலகுக்கு அளித்ததுப் பெருமை சேர்த்ததும் பெண் குலம்தான் . ÷ அதனால்தான் "" ஆவதும் பெண்ணாலே ; அழிவதும் பெண்ணாலே '' என்ற பழமொழி கூறினர் நம் முன்னோர் . இப்பழமொழிக்குப் பலரும் தவறாகவே இதுநாள் வரை பொருள் கொண்