Posts

Showing posts from March 1, 2020

நூல் குறித்த திறனாய்வு “உலகெனும் வகுப்பறை”

Image
எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் “உலகெனும் வகுப்பறை” நூல் குறித்த திறனாய்வு எழும்பூர் இக்கா மையத்தில் நேற்று (1.3.2020) நடைபெற்றது. கலைஞன் பதிப்பகத்தின் மூலம் சென்னையில் அறிமுகமாகி, மலேசியாவில் நட்பாகி இன்றுவரைத் தொடர்கிறது எழுத்தாளர் திரு சங்கரநாரயணனின் நட்பு. அவருடைய எழுத்துக்கும் அன்புக்கும் கட்டுப்பட்டவள் என்பதால்…. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரு ஔவை நடராசன், கிருங்கை சேதுபதி, திரு பாஸ்கர் சக்தி போன்றோரின், நூல் குறித்த பன்முகப் பார்வை கொண்ட உரைகளைக் கேட்டு மகிழ்ந்த தருணத்தை மறக்க முடியாது…. அரங்கத்தில் சான்றோர் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒளி விளக்கு சற்று மங்கியிருந்ததால், அதை நிழற்படங்களும் (கருப்பாக) பிரதிபலித்துவிட்டன….