Posts

Showing posts from November 23, 2014

சலங்கை பூஜை - பாபாஞ்சலி

Image
திருச்சிற்றம்பலம் பாபாஞ்சலியின் நடனாஞ்சலி பாபாஞ்சலி கலைக்கோயில் மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி கடந்த 23-11-2014 ஞாயிறு மாலை சென்னை அயினாவரம் அன்னை மஹாலில் சிறப்புடன் நடைபெற்றது . திருவாசகப்பாடலே இறைவணக்கப்பாடலாக ஒலித்தது . பாரம்பரிய முறைப்படி புஷ்பாஞ்சலியோடு துவங்கிய நிகழ்ச்சி அப்பர் சுவாமிகளின் திருவங்க மாலையினை நாட்டியத்தின் மூலம் காட்சிப்படுத்தியது யாவும் அருமை . செல்வி பவானி சக மாணவிகளோடு இணைந்து ஆடிக்காட்டிய   சுந்தரரின் வரலாறு சிறப்புடன் அமைந்தது . நிறைவாக திருவாசகத்தின் சாரமாகத்திகழும் சிவபுராணத்திற்கு மாணவியரோடு இணைந்து குரு . திருவடிச்சிலம்பன் அபிநயித்தது பார்வையாளர்களை மெய் மறக்கச்செய்தது . அப்போது அங்கு கூடியிருந்த கலைஞர்கள் பெற்றோர்கள் என யாவரும் சிவபுராணத்தை இசைத்து மகிழ்ந்தனர் . இக்கலைச்சேவையின் மூலம் தெய்வீகத்தமிழை எல்லோர் மனதிலும் பதியச்செய்வதே பாபாஞ்சலியின் நோக்கம் என்றார் அதன் இயக்குனர் திருவடிச்சிலம்பன் . விழாவில் சிவலோகம் திவாகர் மஹராஜ் மற்றும் இடைமருதூர் மஞ்சுளா அம்ம