Posts

Showing posts from January 17, 2016

வடலூர் ஒளி நிலையம் ஒளிரட்டும் - சிறு துளி பெரு வெள்ளம்

Image
வள்ளலார் அன்பர்களே.... சமரச சுத்த சன்மார்க்க நேயர்களே.... வள்ளலார் வழி வாழும் சான்றோர்களே.. அன்போடு கரம் கோர்த்து உதவுங்கள். இந்த அன்பரின் லட்சியம் நிச்சயம் வெல்லும் உங்களின் உதவியினால்.... சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை கிட்டத்தட்ட  50 ஆண்டுகளாக சின்னாளப்பட்டியில்  நடத்தி வரும் பெரியவர் சு.ம.பாலகிருஷ்ணன். 84 வயதைக் கடந்தவர்.  சின்னாளப்பட்டியில் உள்ள தன் இல்லத்தின் ஒரு பகுதியை வள்ளலாருக்காகக் கோயில் கட்டி வழிபட்டு வரும் (சமரச சுத்த சன்மார்க்க சங்கம்)  இவரும் இவருடைய மனைவியாரும் அங்கேயே ஒரு சிறிய அறையில் வாழ்கிறார்கள். தினமும் பசி என்று வருவோர்க்கு அன்னதானம் செய்துவருகிறார்கள், திருவருட்பா ஓதுதல் ஒதுவித்தல் போன்றவையும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவர் இத்தள்ளாத வயதிலும் வடலூரில் தைப்பூசத்தின் போது வரும் அன்பர்களுக்காக, குறிப்பாக பெண்கள், முதியோர்களாக ஒரு கட்டிடம் கட்டத் தொடங்கி அது பண வரவும் பொருள் வரவும் இன்றி தடைப்பட்டுள்ளது. அவர் காலத்துக்குள்ளாகவே இதைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளார். ஆனால்... நல்ல உள்ளங்கள் உதவினால் அல்லவா நல்ல செயல