நலம் தரும் நாயன்மார்கள் பெருவிழா 28.4.19

திருவலிதாயம் திருநெறிய சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளையின் சார்பில் அப்பரடிகளின் (சித்திரை-சதயம்) குருபூஜையை முன்னிட்டு

 "நலம் தரும் நாயன்மார்கள்  -பெருமவிழா (நான்காம் ஆண்டு) கடந்த 25.4.2019 முதல் 28.4.2019 வரை நடைபெற்றது. அதில்  ஞாயிறு மாலை பொன்னேரி குமாரி ஸ்ரீதேவி அவர்களின் கோச்செங்கட்சோழ நாயனார் பற்றிய தனி நடன நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து,  நாட்டியமாடிய சின்னஞ்சிறு மழலையருக்கெல்லாம் சான்றிதழ் வழங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்நிகழ்ச்சியில்  பாடி திரு சுப்பிரமணியன், திரு. முத்துராமலிங்கம், தெள்ளாறு மணி, கல்லாடர் விஸ்வ ஜோதி பொன்.சுந்தர வேலாயுதனார், இடைமருதூர் கி.மஞ்சுளா போன்றோர் கலந்துகொண்டனர்.








இடமிருந்து... அமர்திருப்பவரில் இரண்டாவதாக குமாரி ஸ்ரீதேவி, (நடன ஆசிரியை) தெள்ளாறு மணி, முத்துராமலிங்கம், இடைமருதூர் கி.மஞ்சுளா, விஸ்வஜோதி பொன் சுந்தர வேலாயுதனார், பாடி சுப்பிரமணியன் ஆகியோர்

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!