சிலம்பொலியார் காலமானார்


இன்று காலை (6.4.2019) முனைவர் பா.இறையரசன் அவர்கள் குறுஞ்செய்தி மூலம் மூத்த தமிழறிஞர் சிலம்பொலியார் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

சாகித்ய அகாதெமியில் நடந்த குழந்தை இலக்கியம் தொடர்பான  நிகழ்ச்சியில் இடைமருதூர் கி.மஞ்சுளா பேசுகிறார் என்பதைப் பத்திரிகையில் பார்த்தவுடன் சென்னை வாகன நெரிசலையும் பொருட்படுத்தாமல் வந்தேன் என்று கூறினார். தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் கடைசி வரிசையில் வந்து அமர்ந்து என் பேச்சைக் கேட்டு ரசித்ததுடன், அந்நிகழ்வில் எனக்கு திரு பூவண்ணன் அவர்களின் “குழந்தைப் பாடல்கள்” நூலை பரிசளித்து மகிழ்ந்ததை இன்று நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.
அவர் மறைவு தமிழுலக்குக்கு மிகப்பெரிய இழப்பு.




Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!