திருவாசகம் - எட்டாம் திருமுறை - நூல் விமர்சனம் (தினமணி)

 

இன்றைய தினமணியில்....

 

என் தாய் தந்த ஊக்கத்தாலும், ஆதரவாலும்... அடியேனின் எட்டாண்டு கடும் உழைப்பில் உருவான "எட்டாம் திருமுறையான திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் துணையாகக் கொண்டு "மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்" என்ற தலைப்பிலான முனைவர் பட்ட ஆய்வேடு இந்த ஆண்டு(2021) மணிவாசகர் பதிப்பகத்தால் நூலாக மலர்ந்துள்ளது.

 

 


இன்றைய தினமணியில் (5.4.2021) அந்நூல் பற்றிய விமசர்சனம் வெளிவந்திருப்பது குருவருளின், திருவருளின் பெருங்கருணை.

இந்நூலிலிருந்து எந்தப் பகுதியையும் நூலாசிரியர் அனுமதி இல்லாமல் எடுத்தாண்டாலோ, அடிக்குறிப்புகள் இல்லாமல் சிற்சில பகுதிகளை (நூலின் பெயரைக் குறிப்பிடாமல்) எடுத்துப் பயன்படுத்தினாலோ, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் முழு உரிமை ஆசிரியருக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குமே உரியது.

 

ஆய்வை வழிநடத்தி சிறப்பாக உதவிய (கைட்) முனைவர் திரு . குருநாதன் அவர்களுக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்குநர்கள் (அன்றைய- இன்றைய) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

 

இன்ப அன்புடன்

இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!