குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவாக சிறுவர் இலக்கியத்துக்கான விருது

டி.கே.அவ்வை சண்முகம் அவர்களின் பிறந்த நாள் விழா.... இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு திருமதி இந்திரா கலைவாணன் பெயரில் வழங்கப்பட்ட "மங்கையர் திலகம்" விருது. "நாடகத் தந்தை" சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் சார்பில் தமிழக "நாடக மேதை" டி.கே.அவ்வை சண்முகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர் ராகசுதா அரங்கில் 20.10.2021-அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறுவர் இலக்கியப் பங்களிப்புக்கா தினமணியின் முதன்மை உதவி ஆசிரியரான இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு "மங்கையர் திலகம்" என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. (இவர் தற்போது தினமணியின் தமிழ்மணி, சிறுவர்மணி பகுதிக்குப் பொறுப்பாசிரியராக இருந்து வருகிறார்) இவ்விருது நிகழ்ச்சியில் நீதியரசர் வள்ளிநாயகம், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, திரு நல்லி குப்பசாமி செட்டியார், அரிமா டாக்டர் ஜி.மணிலால் டி.கே.கலைவாணன், பாலம் கல்யாணசுந்தரம், நடிகை வெண்ணிறை ஆடை நிர்மலா முதலிய பலர் கலந்து கொண்டனர். (மேலும் தகவலுக்கு... அழைப்பிதழ் பார்க்கவும்) இது தொடர்பான பத்திரிகை செய்தி (புகைப்படத்துடன்) தினமலர் நாளிதழில் (30.10.2021) வெளியாகியுள்ளது. தினமலருக்கு என் மனமார்ந்த நன்றி!

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!