மங்கையர் சோலை-பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்பு (14.5.2022- 21.5.2022)

பொதிகை தொலைக்காட்சியில் மங்கையர்ச் சோலை நிகழ்சியில், விருந்தினராக நடிகை திருமதி வடிவுக்கரசி அவர்கள் பங்கேற்றார். சாதனை மகளிர் நான்கு பேருடன் நானும் ஒரு சாதனைப் பெண்ணாக... அதிலும் "தலைசிறந்த எழுத்தாளர்" என்கிற... நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு. விஜய கிருஷ்ணன் அவர்களின் அறிமுகவுரையுடன் அறிமுகமாகிப் பங்கேற்றது மறக்க இயலாத இன்ப நினைவுகள். பொதிகை தொலைக்காட்சிக்கு என் நன்றி. என்னுடைய படிப்பு... எழுத்துப் பயணம், பத்திரிகை பயணம் தொடங்கிய விதம் குறித்தும், என் நூல்கள் செய்த மிகப்பெரிய திருப்புமுனைகள், மறக்க முடியாத அனுபவம் குறித்தும் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டது அதைவிட மகிழ்ச்சியைத் தந்தது. இதன் முதல் பகுதியைப் பார்த்து வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்கள், அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. வரும் வாரம்தான் (21.5.22 இரவு 9 மணி) இந்நிகழ்ச்சி (ஐந்து பெண்களின்) அதிக சூடுபிடிக்கும்படி இருக்கும்... பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள் வாசகர்களே... -இன்ப அன்புடன் இடைமருதூர் கி.மஞ்சுளா...

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!