தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும் - சைவத்தில்… (சைவ நெறி -அன்பு நெறி - அருள்நெறி) இடைமருதூர் கி.மஞ்சுளா, எம்.ஏ., எம்ஃபில், . முன்னுரை அன்பே கடவுள் என்பதுதான் சைவத்தின் தலையாய மந்திரம். அன்பு, உயிரிரக்கம், ஜீவகாருண்யம், கருணை இவை அனைத்தும் சைவத்தின் ஒழுக்க நெறிகளாகும். சைவ சமயத்தின் தனிப்பெருங் கடவுளான அன்பே வடிவான சிவபெருமானை – ஆண்டவனை வணங்கும் அன்பர்கள், அவ்வன்பை இறைவனிடம் மட்டுமல்லாது, உலகில் உள்ள பிற உயிர்களிடமும் காட்டி, மனிதனாகப் பிறந்தவர்கள் தெய்வ நிலைக்கு உயரமுடியும் என்பதை வலியுறுத்தியது சைவ சமயம். கொல்லாமை, புலால் உண்ணாமையே சைவத்தின் ஒழுக்க நெறிகளுள் தலையாயது. இந்நெறி வழி சைவத்தின் மாண்பையும், அன்பின் சிறப்பையும், ஜீவகாருண்யத்தின் அவசியத்தையும், தாவர உணவின் மகத்துவத்தையும் மேன்மைகளையும், தாவர உணவு தவிர்த்த புலால் உணவால் ஏற்படும் தீமைகளையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். சமயமும் மதமும் சமயம் வேறு, மதம் வேறு. மதம் என்னும் சொல், “கொள்கை ” என்னும் பொருளில் வழங்கி வருகிறது. மணிமேகலைக் காப்பியத்தில் “சமயம் ” என்ற
"பெண்களின் கைப் பையில் என்ன இருக்கும்" என்று யாரிடமாவது நீங்கள் கேட்டுப் பாருங்கள். உடனே பதில் வரும் இப்படி: பௌடர், கண்ணாடி, சீப்பு, பொட்டு, லிப்ஸ்டிக் இத்யாதி இத்தாதி...... ஆனால் என் கைப் பையில் எப்போதும் இருப்பது இரு நூல்கள். அப்படி, நான் எப்போதும் என் கைப்பையில் வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்று அன்பு நூல், மற்றொரு அறிவு நூல். அதாவது, திருவாசகம் அன்பு நூல், திருக்குறள் அறிவு நூல். இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு மிகமிக அவசியம். இந்த இரு நூல்களை ஆழ்ந்து கற்று உள்வாங்கிக் கொண்டாலே போதுமானது. அவ்வாறு உள்வாங்கிக் கொண்டவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். உலகில் தனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் அதை இறைவன் செயல் அதுவும் சிவனின் செயல் என்று மௌனமாக ஏற்றுக்கொள்வார்கள். இதைத்தான் சைவ சித்தாந்தமும் போதிக்கிறது. எது நடந்தாலும் அது சிவன் செயல் என்று இரு. அவன் உடனாய் இருந்து எல்லாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். நாம் வெறும் கருவிதான் . இதுதான் சைவசிந்தாந்த உண்மை. எத்தகைய குழப்பத்தில் இருந்தாலும் இந்த இரு நூல்களில் ஏதாவது ஒன்றை எடுத்துப் புரட்டி, கண்ணில் பட்டதை வாசித
இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்! By dn First Published : 02 January 2015 02:53 PM IST "இதிகாசங்கள் எத்தனை?' என்று கேட்டால், உடனே எல்லோரிடமிருந்தும் வரும் பதில்கள் இராமாயணமும் மகாபாரதமும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இதிகாசங்கள் இரண்டல்ல; மூன்று. சிவரகசியம், இராமாயணம், மகாபாரதம் ஆகிய மூன்று என்பதுதான் பண்டைய மரபு. இதை திருமுருக கிருபானந்தவாரியார் கூட பல சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார். கந்தபுராணத்தினுள் "சிவரகசியம்' என்ற ஒரு பகுதி உள்ளது. இதற்குச் "சிவரகசிய கண்டம்' என்று பெயர். இதிகாசங்களிலேயே மிகவும் உயர்ந்தது லட்சம் கிரந்தங்களைக் கொண்ட பரமேதிகாசம். அதுதான் சிவரகசியம். ஆனால், சிவரகசியம் என்ற நூலின் தலைப்புக்கேற்ப அந்த இதிகாசம் இன்றுவரை ரகசியமாக, சமயக் காழ்ப்புணர்ச்சியாளர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, இராமாயணத்தையும் மகாபாரதத்தையுமே குறிப்பிடும்படியாக மக்களின் மனங்களையும் அறிவையும் மழுங்கச் செய்துவிட்டனர் பிற மதத்து - சமயத்துப் பெரி(சிறி)யோர்! அதனால் அது இன்றுவரை ரகசியமாகவே உள்ளது. சைவத்தின் பெருமையை உண்மைகளைக
Comments
Post a Comment