யார் இந்த ஜெயவிஜயா....

அனைத்து நண்பர்களுக்கும், இந்த வலைப்பூவை (அதிகம் இதில் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் அதையும்) வாசிக்கும் வாசக அன்பர்களுக்கும் வணக்கம். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வலைப்பூவுக்குள் நுழைந்துள்ளேன். காரணம், உங்களுக்கே தெரிந்திருந்திருக்கும், இருந்தாலும் சொல்லி விடுவது நல்லது. வேறு என்ன.... அலுவலகப் பணி மற்றும் முனைவர் பட்ட ஆய்வுதான். அப்படி என்னதான் இத்தனை ஆண்டுகளாய்...... செய்கிறீர்களோ என்று மனதுக்குள் நினைப்பது கேட்கிறது. என்ன செய்வது நான் எடுத்துக்கொண்ட தலைப்பும் ஆய்வும் அத்தகையது. இரு ஞான நூல்களைப் புரட்டிப்பாக்க சிறிதாவது ஞானம் வேண்டாமா..... மேலும், யார் இந்த ஜெயவிஜயா என்று ஒரிரு நாள்களுக்குப் பிறகு பலரும் கேட்கப் போகிறார்கள். ஜெயவிஜயா ஒருவர்தான். பெயரில் இருவர். இந்த இருவரும் ஒருவருக்கு மிக நெருக்கமானவர்கள். யோசித்து வையுங்கள் இரண்டொரு நாளில் இவர் யார் எனக் கூறுகிறேன். அன்புடன் இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!