யாரிந்த ஜெயவிஜயா

வணக்கம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறேன். மன்னிக்கவும். காரணம், இருக்கத்தானே செய்கிறது. பல ஆண்டுகளாக நான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த புனைபெயர்களுள் ஒன்று ஜெயவிஜயா. இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்குக் காரணம் அது என் அம்மையின் தோழியர் இருவர் பெயர் என்பதால்தான். அம்மையா.... யாரவர்..... அந்த அம்மைக்குத் தோழியரா.... ஆம்! அவர்தான் நம் உயிருக்கு உரிமையுள்ள (உடலுக்கு உரிமையுள்ளவள் - நம்மைப் பெற்ற தாய்) மாதொருபாகனாகத் திகழும் பார்வதி தேவி. அவருடைய தோழிகள் பெயர்கள்தான் ஜெயா, விஜயா - ஜெயவிஜயா. இந்தப் பெயரில் எழுதவேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு நனவாகப் போகிறது. கூடிய விரைவில் இந்தப் புனைபெயருடன் உங்களுக்கு ஓர் இலக்கிய விருந்து படைக்க இருக்கிறேன். படித்து மகிழுங்கள். அன்புடன் இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!