விக்கிரமன் அவர்களின் ஆத்மாதான்



நண்பர்களே... உறவினர்களே... என்ன வியப்பு பாருங்களேன்... 

சில மணித்துளிகளுக்கு முன்தான் திரு விக்கிரமன் அவர்களைப் பற்றிய பதிவை  முகநூலிலும் என் வலைப்பூவிலும் பதிவு செய்தேன். திடீரென்று இன்று ஏனோ அப்படிச் செய்யத் தோன்றியது. ஆனால், செய்யத் தூண்டியது யார்...

திரு விக்கிரமன் அவர்கள் மறைந்தது டிசம்பர் மாதம் என்று தெரியும் ஆனால், நான் அவர் மறைந்த நாளை மறந்துவிட்டேன். சரியாக இன்று (டிசம்பர் -1) அவரைப் பற்றிப் பதிவு செய்ய வைத்தது யார்.... திரு விக்கிரமன் அவர்களின் ஆத்மாதான் போலிருக்கிறது.

முகநூலில் நான் பதிவேற்றிய சிறிய நேரத்திற்கெல்லாம்  திரு.ராஜ்கண்ணன் அவர்கள் பார்த்துவிட்டு, படித்துவிட்டுக் கூறினார்.... இன்றுதான் அவருக்கு நினைவு அஞ்சலி நடைபெறுகிறது... உங்களுக்குத் தெரியாதா... என்று அவரும் என்னோடு சோகப்பட்டுக் கூறியபோது, நான் அதிர்ந்தே போனேன்.

 ஆம், இன்றுதான் திரு விக்கிரமன் அவர்கள் எழுத்துலகை விட்டும் நம்மை எல்லாம் விட்டும் பிரிந்த சோகமான நாள். அதை இன்று எனக்கு நினைவூட்டி, என்னை எழுத வைத்தது அவரே... அவர் ஆத்மாவே என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்...... நல்ல ஆத்மாக்கள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன என்பதற்கு விக்கிரமன் அவர்களே மிகச்சிறந்த உதாரணம்.
நான் இன்னும் வியப்பிலிருந்து மீளவில்லை!!!

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!