சாதகப் பறவையாய் இருங்கள் - நூல்




சாதகப் பறவையாய் இருங்கள்   மற்றும் மீண்டு வாரா வழி ஆகிய  இரு நூல்கள் 2012 -  2013-இல் வெளிவந்ததாக நினைவுஇந்நூல்களின் ஆசிரியரான எனக்கு  நான்கைந்து பிரதிகள் (ஆப்செட் பிரதிகிடைத்தன. பதிப்பகத்தாரால் நூலக ஆணைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நூலக ஆணையும் கிடைத்திருக்கிறது ஆனால்... இதுவரை விற்பனைக்கு வந்ததாகத் தெரியவில்லை. சாதகப் பறவையாய் இருங்கள் என்ற நூல்ஆன்மீகக் களஞ்சியம் என்ற ஆன்மிக மாத இதழின் பொறுப்பாசிரியராக  -இணையாசிரியராக (10 ஆண்டுகள்) -  இருந்தபோது நான் படித்து ரசித்த இராமாயணம், மகாபாரதம், பாகவதம், நபிகள் நாயகம்(ஸல்) வாழ்க்கை வரலாறு, சிவமகா புராணம், விஷ்ணு புராணம், சூபி கதைகள் முதலிய பலவற்றிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை அதில் எழுதிவந்தேன். அக்கதைகளே இந்நூலில் உள்ளவை.



மீண்டு வாரா வழி என்ற நூலில் – தினமணி வெள்ளிமணியில் வெளியான ஆன்மிகக் கட்டுரைகள் மற்றும் மணிவாசகரின் திருவாசகத் தொடர்களை வைத்து எழுதிய தனி கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நூலக ஆணை மட்டுமே கிடைத்தால் ஒரு நூல் சிறந்தாகிவிடாது. விற்பனைக்கு வந்து, வாசகர்கள் படிக்க வேண்டும். ஆன்மிக உலகிற்குப் பயனுள்ள இந்நூல்களை விற்பனைக்குக் கொண்டு வர யாராவது முயற்சி செய்து பாருங்களேன்… நண்பர்களே….

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!