கழகம் - இனி வேண்டாம் -மறுபதிப்பு



தினமணி - தமிழ்மணியில் வெளியான (12.3.2017) “கழகம் இனி வேண்டாம்” - இடைமருதூர் கி.மஞ்சுளா) கட்டுரையை வளசரவாக்கம் செய்தி மடல் பத்திரிகையில் மறுபதிப்பு செய்து, அக்கட்டுரையின் கீழ் சிறு குறிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மடல் பதிப்பில் நிறைய பிழைகளுடன் (அந்தக் கட்டுரை) இருந்தது என்பது வேறு விஷயம். கண்ணில் பட்ட பிழைகளை மட்டும் வட்டமிட்டு வைத்துள்ளேன்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை ஓர் இலக்கிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த எங்கள் அலுவலக நண்பரும் பக்க வடிவமைப்பாளருமான திரு சூரியநாராயணன் அவர்கள் என்னிடம் ஞாயிறு அன்றே தொலைபேசியில் இதுகுறித்துத் தெரிவித்துவிட்டு ஒரு பிரதியையையும் கையோடு வாங்கிவந்து என்னிடம் தந்தார். மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி. தமிழ்மணியில் இந்தக் கட்டுரையைப் பக்க வடிவமைப்பு செய்ததும் இவர்தான்.


 ஒரு கட்டுரை வேறு பத்திரிகையில் மறுபதிப்பு ஆகிறது என்பதுதான் அந்தக் கட்டுரையின் தரத்தை நிர்ணயிக்கும் அளவுகோல். இதுபோல் தமிழ்மணியில் வந்த (என்னுடைய) பல கட்டுரைகள் (கலைமகள், மெய்கண்டார், சிவனருள், திருக்குறள் கருத்துரை இலவச வெளியீடு, திலகவதியார் ஆதீனச் செய்திமடல், சித்தாந்தம் முதலிய இதழ்களில்) மறுபதிப்புக்குச் சென்றிருக்கின்றன. எல்லாப் புகழும் தினமணிக்கே!

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!