பிரம்மாண்டமான தாமிர சபை...

விராலிமலை அருகில் உள்ள கொடும்பாலூரில் உருவாகி வரும் பிரம்மாண்டமான தாமிர சபை... காப்பர் டெம்பிள்... திருமுறை செப்பேடுத் திருக்கோயில். மேலும் அருணகிரிநாதருக்கு முருகன் விராலிமலை இருக்கும் இடத்துக்கு வழிகாட்டியதுடன், அவராகவே வலிய சென்று அருணகிரிநாதருக்கு அட்டமா சித்தி அருளிய இடம். அங்கே சிதலமடைந்து கிடக்கும் இடத்தில் சிவத்திரு. சங்கரன் ஐயாவின் கோயில் திருப்பணி தொடர்கிறது👍 63 நாயன்மார்கள் திருப்பணி அறக்கட்டளை (விருத்தாசலம்) மற்றும் காப்பர் டெம்பிள் நிறுவனர் சிவத்திரு. சங்கரன் ஐயா மற்றும் திருவாசகம் சிவபுராணம் சொல்லும் அன்புக் குழந்தைகளுடன்.... பல்வேறு அரிய கல்வெட்டு வரலாற்றுச் செய்திகளை புதைத்து வைத்திருக்கும்.. முசுகுந்த சுவாமி திருக் கோயில்... (கேட்பாரற்றுக் கிடக்கும்) உலா இன்று. தமிழர்களின் பண்பாடும் கலாசாரமும்... கோயில் கலைகளும் அழிந்து வருவதற்கு... இந்த ஒரு கோயிலும் ஓர் எடுத்துக்காட்டு 😭...நம் வரலாற்று, கலைச் செல்வங்களைக் காப்பாற்ற வேண்டிய தருணம் இது... அதை நாங்கள் மீட்டெடுக்கப் புறப்பட்டு இருக்கிறோம் 🙏 திருவருள் துணை நிற்கட்டும் 👍

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!