"உலகெலாம்" - திருமுறைச் செப்பேட்டுத் திருக்கோயில்

அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை, விருத்தாசலம். நிறுவனர் சிவத்திரு அ.சங்கர் ஐயா அவர்கள் மிகப்பெரிய திருக்கோயில் பணியைத் தொடங்கியிருக்கிறார். இதுவரை, (தான் பிறந்த ஊரில்) கோயில் இல்லாத நாயன்மார்கள் 30 பேருக்கும் மேல் அவரவர் பிறந்த ஊரில் கோயில் கட்டி, வழிபாடு நடத்தி வருகிறார். இதுமட்டுமல்ல... இன்னும் பல இருக்கிறது ஐயாவின் திருப்பணி பற்றி சொல்ல... இது குறித்த விவரங்களை கீழ்க்காணும் இணையதளங்களில் காணலாம். "உலகெலாம்" என்ற பெயர்கொண்டு திருமுறை தாமிர சபை (பன்னிரு திருமுறைகளையும் செப்பேடுகளில் பதித்துப் புத்தகமாக்கி அவற்றைக் கொண்டே கோயில் எழுப்பும் திருப்பணி) உருவாகி வருகிறது... இத்திருப்பணியில் அடியேனையும் இணை்த்துக் கொள்ள இறைவன் திருவுள்ளம் கொண்டிருக்கிறார். இது நான் பெற்ற பெரும் பேறு.... ஒருமுறை திருமுறை பாடினால்போதும் மறுமுறை கருவறை புகும் நிலை மாறும் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது... திருப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் உலகமே திரும்பிப் பார்க்கப் போகும் இத்திருப்பணிக்கு, தங்களால் முடித்த பங்களிப்பை வழங்கி நடராசப் பெருமான் அருளுக்குப் பாத்திரமாகலாம். மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகெலாம்...
www.coppertemple.org 63thirupanitrust@gmail.com coppertemple63 youtube - coppertemple https://youtu.be/OM7ckp3UJlk

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!